தல அஜித்தின் திரைப்பயணம் குறித்து அவரது இளம்வயது நண்பர் ஒருவர் பேசியுள்ளார்.
Ajith Friend Interview Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். கடுமையான உழைப்பிற்குப் பின்னரே இவர் இந்த இடத்தை பிடித்துள்ளார்.
பெரும்பாலான பிரபலங்கள் அளிக்கும் பேட்டியில் அஜித்தின் உழைப்பு தன்னம்பிக்கை குறித்து பேசாமல் இருப்பதில்லை.
இந்த நிலையில் அஜித்தின் இளம் வயது நண்பரான எம்கே ஹாரிஸ் அப்துல்லா என்பவர் அஜித்தை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
முதலில் ஹாரிஷ் அப்துல்லா யார் என்பதை பார்க்கலாம். சென்னையில் சாதாரண பழக்கடை நடத்தி வந்த பின்னர் தன்னுடைய உழைப்பால் இன்று மிகவும் பிரபலமான பல ஜூஸ் கடைகளை வைத்து நடத்தி வருபவர். அஜித் மாடலிங் துறையில் இருந்த போதிலிருந்தே இவருடன் நட்பில் இருந்து வருகிறார்.
தற்போது ஹாரிஸ் அப்துல்லா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் கடுமையாக உழைத்துதான் இந்த இடத்திற்கு வந்தார். அவர் இன்று இவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்க காரணம் அவருடைய உழைப்பும் தன்னம்பிக்கையும் மட்டும்தான்.
ஆசை படத்திற்கு முன்னரே அஜித் இன்னொரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் திடீரென அந்தப் படத்தின் இயக்குனர் இறந்து விட்டதால் அப்படம் கைவிடப்பட்டு விட்டது.
இவ்வளவு கஷ்டப்பட்டு இன்று முன்னணி நடிகராக இடம் பிடித்துள்ளார் அஜித். ஆனால் இவர் பட்ட கஷ்டத்தை போல இன்னொருவரை திரையுலகில் பார்க்க முடியாது.
யாரிடமும் கோபப்பட மாட்டார், வெறுப்பு காட்ட மாட்டார் காரணம் அவர் கஷ்டப்பட்டு முன்னேறியவர் என்பதால் தான்.
சமீபத்தில் கூட ஒருமுறை அஜித்தை பார்த்தேன் அப்போதும் சிறு வயதில் அவருடைய குணம் எப்படி இருந்ததோ அப்படியேதான் இருக்கிறார்.
சக மனிதர்களைப் போலவே நடந்து கொண்டார் என கூறியுள்ளார்.