Actress Vanisri Son Passes Away
Actress Vanisri Son Passes Away

ஊரடங்கால் தன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாததால் பிரபல நடிகையின் மகன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Vanisri Son Passes Away : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் இருந்து வருகின்றனர்.

பலர் வீடுகளிலேயே முடங்கி விட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயலும் அவலமும் நிகழ்ந்து வருகிறது.

திடீரென தர்ஷனின் நண்பனை திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் ரம்யா – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஆரம்பத்தில் மன அழுத்தம் காரணமாக ஒரு இளைஞர் நடுரோட்டில் ஓடிவந்து மூதாட்டியை கடித்து குதறியதில் அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது போன்று தற்போது பிரபல நடிகையின் மகன் ஒருவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ். இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். 35 வயதான இவர் பெங்களூரு அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் இருந்து வருகின்றனர்.

லாக் டவுன் காரணமாக இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாததால் மன அழுத்தம் ஏற்பட்டு தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது மறைவு நடிகையின் குடும்பத்திலும் திரையுலகிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.