போதையில் நடிகையிடம் தவறாக நடக்கவில்லை: போலீஸில் வில்லன் நடிகர் வாக்குமூலம்

நடிகை தெரிவித்த புகாருக்கு, வில்லன் நடிகர் ஷைன் டாம் கூறிய தகவல்கள்…

மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ, தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ‘சூத்ரவாக்கியம்’ என்ற படத்தின் ஷுட்டிங்கின்போது ஷைன் டாம், போதையில் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பிலிம் சேம்பரிலும் புகார் தெரிவித்தார்.

இந்த பரபரப்பு ஒருபுறம் இருக்க, கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.

அப்போது ஷைன் டாம் ஷாக்கோ, தங்கியிருந்த ஓட்டலில் இருந்து தப்பி ஓடினார். அவர் தப்பித்தது ஏன்? என்பது தொடர்பாக விசாரிக்க போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். பின்னர், போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.

விசாரணையில், சம்பவத்தன்று ஓட்டலில் இருந்தபோது, போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்றும், தன்னை யாரோ தாக்க வருகிறார்கள் என்ற பயத்திலேயே ஓட்டலில் இருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அறிவியல் பரிசோதனைக்காக அவரது தலைமுடி மற்றும் நகங்களை சேகரித்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

இந்த விசாரணையின் போது, நடிகை வின்சி அலோசியஸ் கொடுத்த புகார் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஷைன் டாம் சாக்கோ, அந்த புகாரில எந்த அடிப்படையும் இல்லை. இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பாளர்களே உண்மையை சொல்லட்டும்.

நான் படப்பிடிப்பு தளத்தில் அந்த நடிகையிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை’ என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்நிகழ்வு திரைவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

actress compliant to actor shine tom sacco explain