நடிகை சமந்தா மீண்டும் காதல் திருமணம்; ரசிகர்கள் அறிவுறுத்தல்
‘நாக சைதன்யாவை பிரிந்த பிறகு, சமந்தா மீண்டும் காதலித்து திருமண வாழ்வில் இணையவுள்ளார்’ என்ற தகவல் பரவுகிறது. இது பற்றி அவரது ரசிகர்களின் கருத்துகளை காண்போம்..
ஃபேமிலி மேன், சிடாடல் ஹனி பன்னி ஆகிய வெப் தொடர்களை இயக்கியவர் ராஜ் நிடிமொரு. இவரும் சமந்தாவும் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் கணிக்கின்றனர்.
‘ராஜ் நிடிமொருவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜுவும், சமந்தாவும் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது சமந்தா சுடிதார் அணிந்தும், ராஜ் வேட்டி சட்டை அணிந்தும் சென்றிருந்தார்கள்.
தற்போது, வெப்தொடர்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா ‘பங்காரம்’ எனும் படத்திலும் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார்.
ராஜுவும், சமந்தாவும் காதலிக்கிறார்கள் என பேச்சு கிளம்பியபோது, ஹைதராபாத்தில் நடந்த பிக்கில் பால் நிகழ்ச்சியின்போது, இருவரும் கை கோர்த்து நடந்து வந்த புகைப்படம் வெளியாகி வைரலானது.
இச்சூழலில், ‘அடுத்தவரின் கணவர் உங்களுக்கு பொருந்தி வரமாட்டார். கவனம் சம்மு எனவும், ராஜு எனக்கு நல்ல நண்பர் என கூறி உங்களை நீங்களே ஏமாற்றி, மறுபடியும் சிக்கலில் மாட்டி விடாதீர்கள் எனவும், நல்ல துணை அமையும் பொறுத்திருங்கள்’ எனவும் ரசிகர்கள் அன்புடன் அறிவுறுத்தி வருகின்றனர்.