விஷால் திடீரென மயங்கி விழுந்தது ஏன்?: மேலாளர் விளக்கம்..
விஷாலின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? என்பது குறித்துக் காண்போம்..
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ படம்
வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஷால், ரவி அரசு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் விஷால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். விஷால் மயங்கியவுடன், அவரை பொன்முடி தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிகிச்சைக்குப் பிறகு விஷால் நலமடைந்ததாகத் தெரிகிறது.
ஆனால், விஷால் ஏன் மயங்கினார்? அவரது உடல்நிலை எப்படி உள்ளது? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. விஷாலின் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் ஹரி விளக்கம் அளிக்கையில்,
விஷாலுக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை.மதிய உணவு சாப்பிடாமல் ஜூஸ் மட்டும் குடித்ததால் சோர்வு காரணமாக மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்குப் பிறகு விஷால் நலமாக உள்ளார். இனி, உணவு சாப்பிடாமல் இருக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது விஷால் நலமாக உள்ளார். ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை’ என தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் விஷால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது மேடையில் நடுங்கியபடி பேசியதோடு, உடல் எடை அதிகரித்தும் காணப்பட்டார். வைரஸ் காய்ச்சல்தான் காரணம் என்று விளக்கம் கூறப்பட்டது. பின்னர் விஷால் குணமடைந்தார்.
