கோவிலில் இருந்து வெளியான யோகி பாபுவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வருவது மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி பிசியான நடிகராக திகழும் யோகி பாபு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

அதிக தெய்வ பற்று கொண்டுள்ள யோகி பாபு சமீபத்தில் கோவிலுக்கு சென்றபோது அவர் தீண்டாமையை சந்தித்தார் என வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சை எழுந்திருக்கிறது. அதாவது, கோயிலுக்கு சென்று இருந்த யோகி பாபு அங்குள்ள ரசிகர்கள் அனைவருக்கும் கை கொடுத்து புகைப்படங்களும் எடுத்திருக்கிறார். ஆனால் யோகி பாபு கைகொடுக்க வரும் போது அந்தக் கோயிலில் இருக்கும் குருக்கள் ஒருவர் கை கொடுக்க மறுத்துவிட்டு கையை மட்டும் காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அதனை நெட்டிசன்கள் தீண்டாமை செயல் என குறிப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

https://twitter.com/Pothumda/status/1688196914632613888?t=u7Oi2SF6ub-aeoJafymGKg&s=19