Yashika Anand : பிக் பாஸ் யாஷிகா வாய்ப்பு கேட்டு சென்ற போது முன்னணி நடிகரின் அப்பா தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் யாஷிகா.
இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருந்தார்.
தமிழ் சினிமாவில் உள்ள பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை மீ டூ என்ற இயக்கத்தின் மூலம் வெளியில் கூறி வருகின்றனர்.
இதனால் பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது யாஷிகாவும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.
ஒரு முன்னணி நடிகரின் தந்தையும் இயக்குனருமான ஒருவரிடம் வாய்ப்பு கேட்டு சென்ற போது படுக்கைக்கு வந்தால் தான் வாய்ப்பு என கூறியதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் படுக்கைக்கு வர வேண்டும் என்பதை அந்த இயக்குனர் தன்னுடைய அம்மாவிடம் சொன்னதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தற்போது மீ டூ என்ற பெயரில் இது போன்ற பாலியல் தொல்லைகளை வெளியில் கூறி வருவது நல்ல விசயமே. இது தனக்கு நிம்மதி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.