பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து ரசிகர் வெளியிட்டுள்ள பதிவிற்கு நடிகர் விக்ரம் நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளார்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மாபெரும் பொருட்சளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இப்படத்திற்கான பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து ரசிகர் ஒருவர் அளித்துள்ள பதிவிற்கு நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.

அதாவது twitter பக்கத்தில் ரசிகர் ஒருவர் “பல வருடங்களாக தியேட்டருக்கு வராத பாட்டிமார்கள் இந்த படத்தை பார்க்க வரவுள்ளார்கள். என் அம்மாவே 40 ஆண்டுகள் கழித்து பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க தியேட்டருக்கு வருகிறார்” என்று பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவினை பார்த்த நடிகர் விக்ரம் அன்பும் அக்கறையும் கலந்த பதிவிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.