விஜய் டிவி வெளியிட்ட அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள் எப்பா முடியலடா சாமி என தெறித்தோடுகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு சீரியல்களும் 30 நிமிடம் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது அரண்மனை கிளி மற்றும் காற்றின் மொழி ஆகிய சீரியல்கள் 45 நிமிடம் ஒளிபரப்பாகி வரும் என அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள் 30 நிமிஷமே பாக்க முடியல இதுல 45 நிமிசமா என தெறித்தோடுகின்றனர். மேலும் சிலர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் நேரத்தை அதிகப்படுத்துங்கள் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.