தளபதி 68 படத்திற்கு பிறகு விஜய் பிரேக் எடுக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

வெகு விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது. மேலும் இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தளபதி விஜய் தன்னுடைய 68 வது படத்தை முடித்து விட்டு 6 மாத காலம் பிரேக் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் அரசியலில் இறங்க இருப்பதால் அதற்கான வேலைகளில் ஈடுபடவே இந்த ஆறு மாத பிரேக் எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து விஜய் தரப்பில் யாராவது வாய் திறந்தால் தான் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.