அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறியுள்ளார் அதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
Vijay Sethupathi Walkout From Pushpa : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் இவர் நடிக்க தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி புஷ்பா என்ற படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால் இந்த படத்தில் இருந்து திடீரென விஜய் சேதுபதி வெளியேறியுள்ளார். பிசியான ஷெட்யூல் காரணமாக ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனையால் இந்த படத்தில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.
தான் இந்த படத்திலிருந்து விலகிக் கொள்வதாக நேரடியாக படத்தின் இயக்குனரான சுகுமாரிடம் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது தமிழில் லாபம், கடைசி விவசாயி, கா. பெ ரணசிங்கம், காத்துவாக்குல ரெண்டு காதல், இடம் பொருள் ஏவல், துக்ளக் தர்பார் என பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
தமிழில் விக்ரம் வேதா, பேட்ட ஆகிய படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.