விஜய் என்னுடைய கதையை நிராகரித்து விட்டார் என வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தனுஷை வைத்து அசுரன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரியை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜயை இயக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் நான் பல வருடங்களுக்கு முன்பாகவே விஜயிடம் ஒரு கதை கூறி இருந்தேன், ஆனால் அந்த கதை எனக்கு செட்டாகாது என விஜய் மறுத்து விட்டதாக கூறியுள்ளார்.
வெற்றிமாறன் கூறிய கதை சாதி பிரச்சனை பற்றி பேசும் படமாக இருந்ததால் தான் விஜய் நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.