Varalaxmi Tweet About Police Activity
Varalaxmi Tweet About Police Activity

வீட்டில் இருந்து வெளியே வரும் மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதை விமர்சனம் செய்துள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார்.

Varalaxmi Tweet About Police Activity : கொரானா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி சிலர் ரோடுகளில் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

இவர்களின் மீது போலீசார் சில இடங்களில் தடியடி நடத்தி வீட்டிற்கு திருப்பி அனுப்புகின்றனர். இதுகுறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் டுவீட் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் இது ஊரடங்கு உத்தரவு தான். அதற்காக வெளியே வரும் மக்களை அடிப்பது சரியல்ல. அவர்கள் செய்வது ஒன்றும் குற்றமல்ல என விமர்சித்துள்ளார். மேலும் மக்கள் தற்போதைய சூழலை புரிந்து கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

https://twitter.com/varusarath/status/1243177599217483779?s=19

இது ஒருபுறமிருக்க பெங்களூரில் சில நபர்கள் சேர்ந்து போலீஸை தாக்கிய வீடியோவை பகிர்ந்து தங்களுக்காக உயிரை ஆபத்தில் வைத்து பணி புரியும் போலீசாரிடம் இவ்வாறு நடந்து கொள்வது தவறு என குறிப்பிட்டு இந்த சம்பவத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் ஒரு பதிவில் கூறியுள்ளார்.

https://twitter.com/varusarath/status/1243089200456413185?s=19