Vandi Movie : தமிழ் சினிமாவில் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள வண்டி படம் எப்படி இருக்கும்? எந்த மாதிரியான கதையை பேசும் என இப்படத்தின் தயாரிப்பாளர் அளித்த பிரத்தேக பேட்டியில் கூறியுள்ளார்.
திறமையான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விதார்த். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் தற்போது ராஜேஷ் பாலா இயக்கத்தில் அஸீர் நடிப்பில் வண்டி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 23-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது.
இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் அஸீர் பேசியதாவது, வண்டி படம் நல்ல கருத்துள்ள படம். முதலில் இந்த படத்தின் கதையை மலையாளத்தில் தான் தயார் செய்தோம்.
தமிழ் மீது கொண்ட ஈர்ப்பால் தான் தமிழில் உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. தமிழ் மக்களை நம்பி தான் படத்தை தயாரித்துள்ளோம்.
நிச்சயம் மக்களுக்கு பிடித்த படமாக இருக்கும். பொதுவாகவே வண்டி என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அப்படியான வண்டியால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன. என்பதை பற்றி பேசும் படமாக வண்டி இருக்கும்.
இப்படத்தில் அனைத்தையும் லைவாக ( Live ) ஷூட் செய்துள்ளோம். ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் விதார்த் அருமையாக நடித்துள்ளார் என கூறியுள்ளார்.