தல அஜித்தின் வலிமை படத்தில் நான்கு நாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் போனி கபூர் அவரை நேரில் சந்தித்து இருந்ததும் இதற்காக தான் என பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது இன்னொரு தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது இப்படத்தில் மேலும் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளார்களாம்.
அஜித்தின் போலீஸ் டீம் 7 பேர் அடங்கிய குழுவாக இருக்கும் எனவும் அதில் 4 பேர் பெண் போலீஸ் எனவும் கூறப்படுகிறது.
ஒரு போலீசாக நயன்தாரா நடிக்கிறார். மீதம் மூன்று பெண் போலீசாக ஐஸ்வர்யா ராஜேஷ், யாஷிகா ஆனந்த், நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வைரலாகி வருகிறது.
ஆனால் இது பற்றி படக்குழு இதுவரை எந்த விளக்கும் கொடுக்கவில்லை. வினோத் மட்டும் ஒரு பேட்டியில் இந்த படத்தில் அஜித்தை தவிர வேறு யாரையும் இன்னும் வலிமை படத்திற்காக கமிட் செய்யவில்லை என முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.