கொரானா சிகிச்சையளிக்க தற்காலிக மருத்துவமனையாக என்னுடைய மாளிகையை தருகிறேன் என கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.
Vairamuthu Announcement About Corona Treatment : இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரசில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் தங்களின் அலுவலகங்களை மருத்துவமனையாக மாற்றிக் கொள்ள அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் தன்னுடைய கல்யாண மாளிகையை (பொன்மணி மாளிகை) தற்காலிக மருத்துவ மனையாக மாற்றி கொள்ள அனுமதி அளித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக
எங்கள் திருமண மண்டபத்தை
(பொன்மணி மாளிகை)
அரசுக்கு ஒப்படைக்கிறேன் என்று முதலமைச்சருக்குக் கடந்த வாரம்
கடிதம் எழுதியிருக்கிறேன்.
நாட்டின் நலமே நமது நலம்.— வைரமுத்து (@Vairamuthu) April 7, 2020