வடிவேலு குடும்பத்தில் தாங்க முடியாத மரணம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேல். எக்கச்சக்கமான நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமான இவர் வைகைப் புயல் என அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறார்.
காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வந்த இவரது நடிப்பில் இறுதியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து வடிவேலுவின் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில் அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மறைவு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஆமாம் நடிகர் வடிவேலுவின் தாயார் உடல் நலக் குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்ததாக தெரியவந்துள்ளது. எப்போது வெளியே சென்றாலும் தன்னுடைய அம்மாவின் முகத்தை பார்க்காமல் வெளியே செல்ல மாட்டார் வடிவேலு.
அப்படி அம்மாவுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து வந்தவர் வடிவேலு. இப்படியான நிலையில் அவரது மறைவு வடிவேலுக்கும் அவரது குடும்பத்துக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாயாரின் மறைவால் கதறி துடிக்கும் வடிவேலுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.