சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் வடிவேலு செய்த வேலை என்ன எனவும் அவருடைய தலைவிதியை மாற்றியமைத்தது யார் என்பது பற்றியும் பார்க்கலாம் வாங்க.
Vadivelu in Cinema Entry Secrets : தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவருடைய ரியாக்சன்கள் இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெரும் பலமாக இருந்து வருகிறது.
வடிவேலுவை முதல் முதலாக திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் ராஜ்கிரண் தான். கிளி ஜோசியக்காரர் வடிவேலுக்கு எச்சரிக்கை மணி அடிக்க அதன் பின்னர் கவுண்டமணி இவரை போட்டு புரட்டி எடுப்பது தான் இவர் நடித்த முதல் காட்சி.
அதிலும் அண்ணே பார்த்துணே படாத இடத்தில பட்டுட போகுது என்ற டயலாக் படு ஃபேமஸ். இந்த படத்தை முடித்து விட்டு வடிவேலு ஊருக்கு கிளம்ப ராஜ்கிரன் ஊருக்கு போய் என்ன செய்யப் போற என கேட்டுள்ளார்.
அதற்கு வடிவேலு வேற என்ன செய்யறது பழையபடி போட்டோவுக்கு பிரேம் பிரேம் போடுற வேலைய தான் செய்யணும் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு ராஜ்கிரண் தான் இனி ஊருக்கு எல்லாம் போகாத.. இங்கேயே என்னுடைய அலுவலகத்திலேயே தங்கிக்கோ என கூறி அவருடைய தலையெழுத்தையே மாற்றி உள்ளார்.