சிம்புவுக்கு வரப்போற பொண்டாட்டி, அஜித்தின் மனக்கஷ்டம், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு உள்ளிட்டவைகள் பற்றி பேசியுள்ளார் பெண் சித்தர் ஒருவர்.
Thala Ajith Political Entry : இந்தியாவில் எப்போதும்ஆன்மீகத்தை சார்ந்த யாரேனும் ஒருவர் எதையாவது கணித்துக் கூறினால் அது மக்களிடையே அதிக கவனத்தை ஈர்க்கும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இதுபோன்ற கருத்துக்கள் மக்களிடையே அதிகம் ரீச் ஆகும்.
இந்த வகையில் தற்போது பெண் சித்தர் ஒருவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித், சிம்பு, ரஜினி குறித்து பேசியுள்ளார்.
ஆம், பெண் சித்தர் லட்சுமி அம்மாள் அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவருடைய ஜாதகத்தில் இதற்கான யோகம் அனைத்தும் உள்ளது.
அவர் சில வருடமாக மன கஷ்டத்தில் இருந்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு அன்பு செலுத்துவது மிகவும் பிடிக்கும். அன்புக்காக ஏங்குபவர். அந்த அன்பு கிடைத்ததால் தான் நடிகை ஷாலினியை அவர் திருமணம் செய்து கொண்டார் என்று பேசியுள்ளார்.
மேலும் சிம்பு ரொம்ப நல்லவர். அவர் ஒரு குழந்தை மாதிரி, அவருக்கு வரப்போற மனைவியும் அப்படித்தான் இருக்கணும் என பெண் தேடி வருகிறார். ஆனால் அவருடைய ஜாதகத்தில் தோஷம் இருக்கு அதற்கு பரிகாரம் செய்தால் தான் பெண் அமையும். ஆனாலும் அவருக்கு வரப்போற மனைவி வாயாடியாக தான் இருப்பார் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகத்தை நம்புபவர். இதுதான் வழி என தேர்ந்தெடுத்து செல்ல மாட்டார். கிடைக்கும் வழியில் சென்று விடுவார் எனப் பேசியுள்ளார்.