ஊர்வசி ரவுடேலா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், பெரும்பாலும் இந்தி படத்தில் நடித்து வருகிறார். 2015- ஆம் ஆண்டில் மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தை வென்று பிறகு அவர் முக்கியத்துவம் பெற்றார்.
2013 ஆம் ஆண்டு சிங் சாப் தி கிரேட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரவுடேலா, 2014 இல் திரு. ஐராவதம் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். 2022 ஆம் ஆண்டில் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அவர் களமிறங்கினார்.
நிகழ்ச்சிகளில் வித்தியாசமான உடைகள் அணிந்து ரசிகர்கள் மற்றும் இணையதளத்தை சூடாக்குவதற்க்கு பெயர் போனவர் ஊர்வசி.
இந்நிலையில் கடந்த வாரம் பிரான்ஸ்-ல் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்குபெற்றார்.அப்போது பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுடேலா அணிந்து வந்த முதலை நெக்லஸ் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது பலரும் அந்த நகை பற்றி வியந்து பேசினார்கள், அதன் விலை எத்தனை கோடி இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் பிரபல நகை வடிவமைப்பாளர் ஊர்வசி அணிந்திருந்தது போலி நகை என்று சாடினார் கேன்ஸ் பட விழாவில் போலி நகையை அணிந்து கொண்டிருந்தது வெட்கமாக இருக்கிறது. நமது நாட்டில் பொக்கிஷமான பல நகைகள் உள்ளன அவற்றை அணிந்து இருக்கலாமே என்று கூறினார். இது பரபரப்பானது.
இதற்கு ஊர்வசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது குழுவினர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் ஊர்வசி அணிந்திருந்தது ஒரிஜினல் நெக்லஸ் அதன் விலை ரூபாய் 200 கோடி தற்போது அந்த நெக்லஸ் விலை ரூபாய் 275 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இது அணைத்து விதமான சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.