உதயநிதியின் சைக்கோ பட பாடலான உன்ன நினைச்சு ரசிகர்களை பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக, தயாரிப்பாளராக வலம் வருபவர் உதயநிதி. இவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்துள்ளார்.
டிசம்பர் 27-ல் திரைக்கு வர உள்ள இந்த படத்தில் இருந்து உன்ன நினைச்சு என்ற மெலோடி பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இளையராஜா இசையில் சித் ஸ்ரீ ராம் இப்பாடலை பாடியுள்ளார். பொதுவாகவே இசை சைக்கோ / இசை ஞானி என புகழப்படும் இளையராஜாவின் இசை மக்கள் மத்தியில் ஒரு மயக்கத்தை உருவாக்கி விடும். இவரது இசையில் சித் ஸ்ரீ ராமின் குரலும் இணைந்து இருப்பது பாடலுக்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.
இளையராஜா இசையில் பாடியது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என சித் ஸ்ரீராம் கூறியுள்ளார்.இந்த பாடல் இந்த வருட மிக சிறந்த மெலடி பாடலாக அமையவும் அதிக வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதே போல் கவிஞர் கபிலன் வைரமுத்து இப்பாடல் வரிகளை எழுதி இருந்தார். அவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
நான் என்றும் இசை உலகின் சக்கரவர்த்தி என்பதை இளையராஜா மீண்டும் இப்பாடலின் மூலமாக நமக்கு உணர்த்தியுள்ளார்.