பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷாவும் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்தினம், இந்த படத்திற்காக அவர் லொகேஷன்களை தேடி வருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இவர்களை தொடர்ந்து மலையாள நடிகர் லாலும் நடிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது த்ரிஷாவும் இப்படத்தில் இணைந்துள்ளார். அவரும் முக்கியமான ரோலில் தான் நடிக்க இருப்பதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது, ஆனால் அந்த ரோல் என்ன என்பது சஸ்பென்ஸ் தானாம்.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் அபிதாப் பச்சனும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அது உண்மை இல்லையாம், இப்படத்தில் அவர் நடிக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.