TNPL SEASON START :
தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) ‘டுவென்டி-20’ கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசன் நேற்று தொடங்குகியது. திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் திண்டுக்கல், சேப்பாக்கம் அணிகள் மோதுகின்றன.
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., தொடர் நடத்தப்படுகிறது. முதல் மூன்று சீசனில் துாத்துக்குடி (2016), சேப்பாக்கம் (2017), மதுரை (2018) அணிகள் கோப்பை வென்றது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் நான்காவது சீசன் இன்று திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் துவங்குகிறது.
கடந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் திண்டுக்கல் அணிக்கு ஜெகதீசன் (2018ல் 396 ரன்) தான் கேப்டனாக இருந்தார்.
இம்முறை முன்னணி இந்திய வீரர் அஷ்வின், தொடர் முழுவதும் கேப்டனாக பங்கேற்க உள்ளது, திண்டுக்கல் அணிக்கு கூடுதல் பலம் தான்.
அரைவயிறு தரும் ஆற்றல், ஆய்வின் மூலம் அறிந்து கொள்வோமா?
ஐ.பி.ல்., தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த அஷ்வினின் அனுபவத்துடன் கவுஷிக், விவேக் உள்ளிட்டோரும் அணியின் வெற்றிக்கு உதவலாம்.
கடந்த 2017ல் கோப்பை வென்றது சேப்பாக்கம் அணி. முன்னணி வீரர் விஜய் சங்கர் கால் பெருவிரல் காயத்தால் அவதிப்படுவதால் தொடரில் இடம் பெறுவது சந்தேகம் தான். இம்முறை கேப்டனாக கவுஷிக் காந்தி களமிறங்குகிறார்.
கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 1 கோடி பரிசு, சாம்பியன் கோப்பை தரப்படும். பைனலில் தோற்கும் அணி ரூ. 60 லட்சம் பெறும். மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ. 40 லட்சம் கிடைக்கும்.
டி.என்.பி.எல்., தொடரில் திண்டுக்கல், சேப்பாக்கம் அணிகள் மோதும் முதல் போட்டியை துவக்கி வைக்க, இந்திய அணியின் ‘ஆல் ரவுண்டர்’ கேதர் ஜாதவ் வந்தார்.