சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா?
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை தொகுத்து வழங்கியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக டி இமான், சின்னக்குயில் சித்ரா, மனோ ஆகியோர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாகாபா மற்றும் பிரியங்கா இவர்களின் காம்போ ரசிகர்கள் மனதில் பெரும்பாலும் அதிகம் கவர்ந்து வந்தது என்றே சொல்லலாம். இவர்களின் நகைச்சுவையான பேச்சிக்கே பல ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.சமீபத்தில் பிரியாவுக்காவிற்கு திருமணம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இந்த வாரம் பிரியங்கா நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருக்கிறார்.
அவருக்கு பதிலாக இந்த வாரம் மாகாபா உடன் இணைந்து மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் லட்சுமி பிரியா அந்த (PK) அனுப்பி தான் இந்த (VK) வந்திருக்கேன் என சொல்லி இருக்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.