2019 காட்டிலும் 2020 ஜூலையில் தமிழகத்தில் வருவாய் அதிகம் கிடைத்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Tamilnadu Revenue in 2020 : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குடிமராமத்து திட்டம் என பல்வேறு நலத்திட்டங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக அரசுஎடுத்து வரும் தொடர் நடவடிக்கை காரணமாக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தின் முதலீடுகளும் அதிக அளவில் குவிந்துள்ளன.
இது போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கடந்த 2019 ஜூலை மாதத்தை காட்டிலும் 2020 ஜூலையில் வருவாய் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதுகுறித்த தகவல்களை வெளியிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் வருவாய் அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த கொரானா பேரிடர் காலத்தில் தமிழகத்தின் வருவாயை அதிகரிக்கச் செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மக்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.