Tamilisai slams
Tamilisai slams

சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

200க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்து, மோசமாக கொடுமை செய்த சம்பவம் அனைவரிடத்திலும் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் இந்த வழக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இக்குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை தற்போது கைது செய்துள்ளனர். மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.

இருப்பினும் இதில் இன்னும் பலர் வெளியே சுற்றி வருகிறார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ”பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது

பெண்ணினம் கசக்கப்படுவதையும், நசுக்கப்படுவதையும், துளியும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று..

மேலும் இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சிறப்பு புலனாய்வு மேற்கொள்ள வேண்டும்” என்று டுவிட்டரில் தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார்.