Tamilisai slams Vaiko
Tamilisai slams Vaiko

Tamilisai slams Vaiko – சென்னை: பிரதமர் மோடி வருகையின் போது கருப்பு கொடி காட்டுவேன் என வைகோ கூறுவது வெத்து போராட்டம் என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன்: தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்.தமிழகத்தில் 40 இடங்களிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளது.

ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்திவிட்டு அடுத்ததாக யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.

கமல் எத்தனை பேரை சந்தித்தாலும் மக்கள் சிந்தித்துதான் வாக்களிப்பார்கள்.ஏழை விவசாயிகளைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காத ப.சிதம்பரம் விவசாயிகளுக்கு நிதி உதவி செய்வதை கொச்சைப்படுத்துகிறார்.

அவரை, விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்.இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆகியோரை விமர்சனம் செய்து பேசினார்.

மேலும் வைகோ குறித்து பேசுகையில், வரும் 6 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

பிரதமர் மோடியின் வருகை சரித்திர மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்று தெரிவித்த அவர், பிரதமர் மோடி வருகையின் போது கருப்பு கொடி காட்டுவேன் என வைகோ கூறுவது குறித்து பேசினார்.

அதில் கூறியதாவது, பிரதமர் மோடி வருகையின் போது கருப்பு கொடி காட்டுவேன் என வைகோ கூறுவது வெத்து போராட்டம் ஆகும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இவ்வாறு கருப்பு கொடி காட்டுவேன் என வைகோ கூறுவது வெத்து போராட்டம் என கூறி வைகோவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.