ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை மட்டும் செய்யவே மாட்டேன் என ஓப்பனாக பேசியுள்ளார் டி ராஜேந்தர்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவராக வலம் வருபவர் டி ராஜேந்தர். இவரது இயக்கத்தில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
நடிகராக மட்டுமில்லாமல் பாடகர் ஆகவும் பல்வேறு படங்களில் பாடியுள்ளார். இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதுவரைக்கும் நான் எவ்வளவோ பாடல்களை பாடி உள்ளேன். சித்தர்களை வணங்கும் நான் சித்தர்களை பற்றி கூட பாடி உள்ளேன்.
ஆனால் இதுவரை நான் மேடை கச்சேரிகளில் பாடியது இல்லை. கோடி ரூபாய் கொடுத்தால் கூட வரமாட்டான் இந்த தாடி என எப்போது மேடை கச்சேரிகளில் பாட மாட்டேன் என சொல்லியுள்ளார்.