NGK படத்தின் விமர்சனங்களுக்கு இடையே நடிகர் சூர்யா ட்வீட் ஒன்றை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Suriya Tweet : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா முதல் முறையாக தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய தரமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் இணைந்து நடித்திருந்த NGK திரைப்படம் இன்று வெளியானது.
படம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, அதே சமயம் செல்வராகவன் ஸ்க்ரீன் பிளேவில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றால் பதிவு செய்துள்ளார்.
அந்த டிவீட்டில் அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம்.
நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்???? என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சூர்யா ரசிகர்களும் அவருடைய டீவீட்டில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்????
— Suriya Sivakumar (@Suriya_offl) May 31, 2019