மீரா மிதுன் பேச்சுக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்துள்ளார் சூர்யா.
Suriya Reaction to Meera Mitun Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் நற்பெயரையும் கொண்டிருப்பவர்.
நட்பது மட்டுமல்லாமல் அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலமாக ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்.
சர்ச்சைக்குரிய நடிகை ஆனந்தி ராணுவத்தில தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக சூர்யா, விஜய், ரஜினி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களை பற்றி அவதூறு பேசி வருகிறார்.
இதனால் இவரது ரசிகர்கள் மீரா மிதுனை தொடர்ந்து கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர். இயக்குனர் இமயமலை பாரதிராஜாவும் மீராவை எச்சரித்து நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா இந்த சர்ச்சை குறித்து முதல்முறையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.
சீக்கிரம் உன்னோட ஆட்டம் அடங்க போது – மீரா மிதுனுக்கு சனம் செட்டி எச்சரிக்கை!!!
இவர் ஏற்கனவே ஒரு முறை தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. 🙏 #AnbaanaFans என தெரிவித்திருந்தார்.
இவருடைய இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மீராவின் தரங்கெட்ட பதிவுகளுக்கு பதில் கொடுத்து நம் தரத்தை நாமே கெடுத்துக் கொள்ள வேண்டாம் என சூர்யா தெரிவித்துள்ளார்.