பாலா, சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் டைட்டில் என்ன என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யா 41 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பல்வேறு வதந்திகள் படம் பற்றி வெளியாகின. படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் சூர்யா புகைப்படத்தை வெளியிட்டு அதனை மறுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு வணங்கான் அல்லது கடலாடி போன்றவற்றை டைட்டிலாக தேர்வு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டில் எந்த டைட்டிலை படக்குழுவினர் செய்தார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு உங்கள் பேவரைட் டைட்டில் எது என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.