பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் டைட்டில் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார். இதனைத் தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 41 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அது முற்றிலும் வதந்தி என படக்குழு விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த படத்தின் டைட்டில் குறித்து அறிவிப்பு வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் காது கேட்காத வாய் பேச முடியாதவராகவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.