சண்டையில் தீர்த்து வைக்க போன விஜயாவுக்கு சுருதி அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா வேலைக்கு கிளம்பியா ஸ்ருதியை பிடித்து நிற்க வைத்து உனக்கு மரணிக்கும் என்னம்மா பிரச்சனை சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன் என்று சொல்ல சுருதி எங்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை என கூறுகிறார். 

விஜயா அத்தை கிட்ட தானே சொல்ல போற கூச்சப்படாம சொல்லு என்று சொல்ல அங்களுக்கும் தங்களுக்கும் எந்த ஆர்கியுமென்ட் வந்ததே இல்லை ஆன்ட்டி என்று கேள்வி கேட்க விஜயா அமைதியாக நிற்க அங்கிள் நீங்க சொல்லுங்க உங்களுக்கு ஆர்கியுமென்ட் வந்ததா இல்லையா என்று கேட்க அதெல்லாம் வக்கீல் மாதிரி கேள்வி கேட்பார் என கூறுகிறார். 

பிறகு ரவி வெளியே வர நானும் ரெடி ஆயிட்டேன் வா உன்ன டிராப் பண்ணிடுறேன் என்று சொல்ல சுருதி ஆட்டோ போட்டு இருக்கேன். ஆட்டோலயே போயிடுறேன் என கூறுகிறார். பிறகு ரவியை பிடித்து நிற்க வைத்து உங்களுக்கு என்னடா பிரச்சனை என்று கேட்க ரவியும் பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை என்று கேட்க விஜயா கேள்வி கேட்க ஆரம்பிக்க ஸ்ருதி ரவியை கூப்பிட்டு முத்தம் கொடுத்து ஈவினிங் வந்து பிக்கப் பண்ணிக்க என்று சொல்கிறார். உதவி செய்த வேலையை பார்த்து விஜயா மிரண்டு போய் நிற்கிறார். 

என்னங்க இதெல்லாம் என்று அண்ணாமலை இடம் கேட்க சின்ன பசங்க சண்ட அவ்வளவுதான் இவங்க விஷயத்தையெல்லாம் நீ தலையிட்டா உனக்கு சுருதி சொன்ன மாதிரி கண்டிப்பா ஸ்ட்ரோக் தான் வரும் என சொல்கிறார். 

அடுத்ததாக முத்து மற்றும் மீனா ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும்போது மீனா அங்கு கொஞ்சம் ஆட்டோவை நிறுத்துங்க என்று சொல்ல முத்து ஏன் அங்க பிரியாணி கடை இருக்கா பிரியாணி சாப்பிட போறியா என்று கேட்க இல்லைன்னு சொன்ன அவளை கூட்டிட்டு போகணும் என்று கூறுகிறார். 

பிறகு சீதா ஆட்டோவில் இடமே இல்லை நான் எங்க உட்காருவது இன்று மீனாவை எழுப்பி முன்னாடி அனுப்பி விட்டு பின்னாடி உட்கார்ந்து கொள்கிறார். மீனா தள்ளி தள்ளி உட்கார முத்து மொத்தமாக எழுந்து நீயே முழுசா உக்காந்துகிட்டா நான் இங்க உக்காந்து ஆட்டோ ஓட்டுவது என கேட்க மீனா நான் தள்ளி தள்ளி உக்காந்தியா ரோட்ல தான் போய் உட்காரனும் என வாக்குவாதம் செய்கிறார். 

பிறகு இருவரும் பக்கத்தில் உட்கார்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சமாதானத்திற்கு வர சீத்தா பின்னாடி பேசஞ்சர் இருக்கேன், ஞாபகம் இருக்கட்டும் என கலாய்க்கிறார். அடுத்ததாக மனோஜ் ரோட்டில் நடந்து வர கடன் கொடுத்த நண்பர் சந்தோஷ் அவரைப் பார்த்து கூப்பிட மனோஜ் ஓடி வர அவரும் துரத்த கூடிய சீக்கிரம் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று மனோஜ் சொல்ல ரோகிணி பணம் கொடுத்து விட்டதாக கூறுகிறார் சந்தோஷ். 

இங்க வீட்டில் மீனா மாலை கட்ட வர சொன்னதற்காக எல்லோரும் வந்திருக்க விஜயா நீ எல்லாம் யார் என்று கேட்க மீனா வேலைக்கு வர சொன்னா என்று சொல்ல அவளே ஒரு வேலைக்காரி அவங்களை வேலைக்கு வர சொன்னாளா என்று கேட்டதும் என்னை நீங்க மீனாவ பத்தி இப்படி எல்லாம் பேசுறீங்க என்று சத்தம் போட்டு விஜயாவை எச்சரிக்கின்றனர். 

பிறகு முத்து மீனா வந்ததும் பூ எல்லாத்தையும் இறக்கி வைக்க அண்ணாமலை இங்கேயா பூ கட்ட போறீங்க என்று கேட்க விஜயா நல்லா கேளுங்க வழியை மறைச்சுட்டா எப்படி போறது வரது என்று சொல்ல அவர் சொல்றதும் சரிதானே ஹால்ல ஷோபா நகர்த்திட்டா பெருசா இடம் இருக்கும் என்று சொல்ல விஜயா அதிர்ச்சியடைகிறார். 

பிறகு எல்லா பூக்களையும் மேலே எடுத்துச் செல்ல மீனா ஆட்டோவுக்கு வாடகை கொடுத்து போய் அடுத்த லோடு எடுத்துட்டு வாங்க என அனுப்பி வைக்கிறார். விஜயா இவ்வளவு பூ எதுக்கு என்று கேட்க மனோஜ் ஏதோ பெரிய ஆடர் வந்திருக்கு ரெண்டு மொத்தமா இரண்டறை லட்சம் ரூபாய்க்கு கிடைக்குமாம் என்று சொல்ல விஜயா ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.