நடிகை சிம்ரன் முதல் முறையாக தன்னுடைய மகன்கள் மற்றும் கணவருடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பிரபலமான இவர் பேட்ட திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
தற்போது மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிம்ரன் தன்னுடைய கணவர் மற்றும் மகன்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அவருடைய இரண்டு மகன்களும் ஓரளவிற்கு வளர்ந்து விட்டனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.