Simbu Idea : இதை மட்டும் சொன்னா ஒருத்தனும் பொண்ணை தொட மாட்டான் என சிம்பு பொள்ளாச்சி பிரச்சனைக்கு ஐடியா கொடுத்துள்ளார்.
பொள்ளாச்சியில் இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் கொடுமையால் தமிழகமே அதிர்வலையை மூழ்கியுள்ளது. பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் சிம்புவும் தன்னனுடைய கண்டனத்தை பதிவு செய்தது மட்டுமில்லாமல் இது போன்ற பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட வழக்கம் போல ஒரு ஐடியாவையும் கொடுத்துள்ளார்.
பெற்றோர்கள் தினமும் தங்களது ஆண் குழந்தைகளுடன் 15 நிமிடமாவது மனம் விட்டு பேச வேண்டும். விருப்பமில்லாமல் ஒரு பெண்ணை தொடுவது உன் அம்மாவை தொடுவதற்கு சமம் என கூறி வளர்க்க வேண்டும்.
இதை பேசுவதற்கு பெற்றோர்கள் தயங்க கூடாது. பிறக்கும் போது அனைவரும் நல்லவர்கள் தான்.
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் போதே சரியான வழியில் சொல்ல வேண்டியதை சொல்லி வளர்த்தால் இது போன்ற பிரச்சனைகளே நடக்காது என கூறியுள்ளார்.