செம்பருத்தி சீரியல் கார்த்திக் எடுத்த திடீர் முடிவு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
Sembaruthi Serial Karthi Request to Fans : தமிழ் செய்தி திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கார்த்திக். இதனைத் தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார்.
60 இந்துக்கள் கட்டாய மதமாற்றம்
இந்த சீரியல் மூலம் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இருப்பினும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் அந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால் கார்த்தி எந்த ஒரு படத்திலும் கமிட்டாகவில்லை.
இப்படியான நிலையில் தற்போது நடிகர் கார்த்திக் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நான் படம் பண்ணுவதை தடுப்பதற்காகவே ஒரு குழு செயல்பட்டு வருகிறது. ஆகையால் நானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளேன்.
உங்களால் முடிந்த பண உதவி செய்து எனக்கு சப்போர்ட் செய்யுங்கள் என ரசிகர்களிடம் கைகூப்பி கேட்டுக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மன்றத்தை கலைத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!