தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கன்னட திரையுலகில் அறிமுகமாகி உள்ளார் நடிகை சாய் பல்லவி.
Sai Pallavi in Kannada Movie : தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக ரசிகர்களின் மனதை கொய்தார். மலையாளத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் வெற்றி பெற்று தொடங்கி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தடகள சாம்பியன்ஷிப் : வெண்கலம் வென்றது இந்திய அணி..
தமிழிலும் தியா, மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மூன்று மொழிகளிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழ் தெலுங்கு மலையாளத்தைத் தொடர்ந்து சாய்பல்லவி அடுத்ததாக கன்னடத் திரையுலகில் தேசிய விருது பெற்ற இயக்குனர் மன்சூர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மன்சூர் கூறிய கதை சாய்பல்லவிக்கு மிகவும் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.
திடீர் Viral “அன்றே கணித்தார் அஜித்” முதல்வரின் அதிரடி திட்டம்.. Viral On Social Media..
மேலும் இந்த படத்தில் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த முக்கியமான பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.