RK Selvamani Order to FEFSI Members

பெப்சி தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் சூட்டிங் ஸ்பாட்டில் அனுமதி என இயக்குனர் ஆர்கே செல்வமணி.

RK Selvamani Order to FEFSI Members : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் மற்றும் உலக நாடுகள் அனைத்தையும் மோசமாக பாதிப்படையச் செய்து வருகிறது. தற்போது இந்தியா தான் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருந்து வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கொரானா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சினிமா தொழிலாளர்களின் அமைப்பான பெப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் கொரானா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டும் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனுமதிக்கப்படுவார்கள் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக அனைத்துக் பெப்சி தொழிலாளர்களும் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.