Producer Council : சர்கார் படத்தின் கதை பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றுள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதை செங்கோல் என்ற பெயரில் நான் எழுதிய கதை என புகார் அளித்திருந்தார் உதவி இயக்குனரான வருண் ராஜேந்தர்.
கோர்ட்டில் வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தற்போது வருண் ராஜேந்தர் அடுத்த கட்ட நடவடிக்கையாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் முருகதாஸ் கதையை திருடி படம் எடுத்ததால் சர்கார் படத்தை தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் முருகதாஸ் இனி படம் எடுக்காத மாதிரி ரெட் கார்ட் போடா வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வருண் ராஜேந்திரனின் இந்த புகாருக்கு தயாரிப்பாளர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.