நடிகை ராஷ்மிகா மந்தனா உடல் நலக்குறைவு காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. தற்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியிருக்கும் இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

அதன் பிறகு தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மீண்டும் தமிழ் தெலுங்கு என பழமொழிகளில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா தி ரைஸ் என்று அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பல ரசிகர்களின் மனதில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக வலம் வருகிறது.

தற்போது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அப்படத்தை தொடர்ந்து புஷ்பா 2, மிஷன் மஜ்னு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

அதாவது, நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த சில நாட்களாகவே மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் இதனால் உடல் நிலை பாதிப்பு அடைந்த ராஷ்மிகா விஜயவாடாவில் உள்ள பிரபல மூட்டு வலி சிகிச்சை நிபுணர் டாக்டர். Guravareddy என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். கால்சியம் குறைவு காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.