Raja Rani2 Episode Update 03.01.22

இறுதி போட்டியில் சரவணன் செய்த வேலையால் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Raja Rani2 Episode Update 03.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சந்தியாவும் சரவணனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில் சரவணன் சந்தியாவை லவ் யூ என சொல்ல சொல்லி கெஞ்சுகிறார். சந்தியா நோ என கூறுகிறார்.

இந்த பக்கம் சிவகாமி சரவணன் பத்தி இனி எனக்கு கவலையே இல்லை. அவன் கஷ்டப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வர அவன் பழகி கொண்டான். இது எல்லாத்துக்கும் சந்தியா தான் காரணம் என பாராட்டுகிறார்.

2022ஆம் ஆண்டில், இந்திய அணி ஆடும் போட்டிகள் அட்டவணை : பிசிசிஐ வெளியிட்டது

மறுநாள் காலையில் போட்டியில் கலந்து கொள்ள சரவணன் ஆயத்தமாகி கொண்டிருக்க சிவகாமி கோவில் விபூதியை எடுத்து வந்து சரவணனுக்கு வைத்து ஜெயிச்சு கோப்பையோடு தான் தென்காசி மண்ணை மிதிக்க வேண்டும் என்று கூறுகிறார். பிறகு சரவணன் அம்மா அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார்.

வந்து பாருங்க…எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் – Sakkarai Thokalaai oru Punnagai DAY 3 Public Review

பிறகு போட்டியாளர்களை மேடைக்கு அழைக்க சரவணன் மேடைக்குச் சென்றார். சிறப்பு விருந்தினராக வந்திருந்த அவரை மேடைக்கு அழைக்கிறார் தொகுப்பாளர். பிறகு அவர் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்ட பின்னர் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பேசுகின்றனர். சரவணன் எனக்கு இந்த போட்டியில் நல்லா சமைக்கணும் அதற்கான பயிற்சி மட்டும் தான் என்னுடைய மூளைக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது என கூறுகிறார்.

பிறகு போட்டியாளர்கள் அனைவரும் சமைக்க தயாராக இருக்கின்றனர். சரவணன் மண்பாண்டங்களை எடுத்து மேலே வைப்பதை பார்த்து குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அர்ச்சனா ஆரம்பமே சொதப்பல் என கூறுகிறார். ஆதியும் அதையே சொல்ல பார்வதி இவர்களை திட்டுகிறார். சிவகாமி அமைதியாக இருக்க சொல்கிறார்.

இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.