சரவணனிடம் தன் கனவைப் பற்றி சொல்லி அழுதுள்ளார் சந்தியா.

Raja Rani 2 Episode Update 04.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. காலையில் எழுந்ததும் எல்லோரும் காபி குடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சரவணன் பார்வதியுடன் இந்த வருஷத்தோட உனக்கு படிப்பு முடியுது அடுத்து என்ன பிளான் என்ன பண்ண போற என கேட்கிறார். அதான் பாஸ்கர் ரெடியா இருக்காரு அப்புறம் என்னென்ன என பார்வதி கூறுகிறார். உனக்குனு கனவு ஏதாவது இருக்கா போலீசா ஆகணும், கலெக்டர் ஆகணும் இந்த மாதிரி என கேட்க அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என கூறி விடுகிறார் பார்வதி. சும்மா இருக்க எதுக்கு நீ பேசிட்டு இருக்க போய் வேலையை பாருங்க என சொல்லிவிட்டு சிவகாமி உள்ளே எழுந்து சென்று விடுகிறார்.

அதன்பிறகு சரவணன் வெளியில் வண்டியை தொலைத்துக் கொண்டிருக்கும் போது அவருடைய அப்பா வந்து இந்த பாராட்டு விழாவிற்கு பிறகு என்னுடைய நடவடிக்கையும் பேச்சும் சரியாக இல்லை என்ன விஷயம் என கேட்கிறார். அப்போது சந்தியாவை ஆசை போலீஸ் ஆக வேண்டும் என்பதுதான் கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்ததால் மற்றவர்கள் பற்றி யோசித்து அவர் தன்னுடைய கனவை போட்டு புதைத்து விட்டார் என சொல்கிறார். சந்தியாவின் கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என சரவணன் செல்ல போலீஸ் உடனே உங்க அம்மா வேணாம்னு சொல்லுவா என கூறுகிறார். பிறகு சந்தியாவை சம்மதிக்க வை. அதன்பிறகு சிவகாமியிடம் வந்து பேசு அது வரைக்கும் நான் அவ கிட்ட இதைப் பற்றி மூச்சு விடமாட்டேன் என கூறுகிறார்.

பிறகு சிவகாமிக்கு இதனை சமைத்து கொண்டிருக்க அப்போது சந்தியா உருளைக்கிழங்கு இருக்கு இதை கூட்டு வைக்கலாமா இல்ல வேக வைக்கவா என கேட்கிறார். மயிலை பச்சைபட்டாணி வாங்கிட்டு வர சொல்லு பச்சை பட்டாணி போட்டு கூட்டு வைத்தா சரவணனுக்கு ரொம்ப பிடிக்கும் என சிவகாமி கூறுகிறார். பிறகு மயிலிடம் பச்சை பட்டாணி வாங்கிட்டு வர சொல்ல சந்தியா செல்கிறார்.

இந்த நேரத்தில் இங்கே வந்த சரவணன் கடையில் உதவிக்கு சந்தியாவை கூட்டிட்டு போறேன் என கூறுகிறார். மேலும் சக்கரையை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு என சரவணன் சொல்கிறார். சிவகாமியின் சரி கூட்டிட்டு போ அவளை படித்தவ தான் உனக்கு உதவியாக இருப்பார் என கூறுகிறார். பிறகு சரவணன் சந்தியாவை அழைத்துக்கொண்டு நேராக கோவில் பக்கத்தில் இருக்கும் ஒரு நீர்நிலைக்கு கூட்டிச் செல்கிறார்.

கொஞ்சம் இங்கேயே இருங்க நான் கீழே போட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு சரவணன் கீழே செல்கிறார். சந்தியா அந்த இடத்திற்கு தன்னுடைய அப்பாவுடன் அடிக்கடி வந்ததை நினைத்து வருத்தப்படுகிறார். ஏழு உங்களுடைய கணவனான போலீஸ் கண்களை என்னால் நிறைவேற்ற முடியவில்லை என செல்கிறார். இப்படி அவர் இதையெல்லாம் யோசித்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் சரவணன் மேலே வருகிறார். அவர் மேலே வந்தது போகலாமா என சந்தியா கேட்க ஏன் இந்த இடம் உங்களுக்கு பிடிக்கலையா நன்றாகத்தானே இருக்கிறது கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகலாம் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் சந்தியாவின் ரூமுக்குள் போன அர்ச்சனா சந்தியாவை பிரச்சனையில் சிக்க வைக்க ஏதாவது கிடைக்கிறதா என தேடி பார்க்கிறார். சந்தியாவின் அப்பா அம்மா போட்டோ அங்கே மாட்டி இருப்பதைப் பார்த்து இதை வைத்து பிரச்சனையை ஏற்படுத்தலாம் இதை அத்தைகிட்ட கொடுத்தாலே போதும் அவங்க பற்றி கொண்டு எரிவாங்க என சொல்கிறார்.

இடப்பக்கம் சரவணன் சந்தியாவிடம் உங்களுக்கு எந்த ஆசையும் இல்லையா கண்டிப்பா ஏதாவது ஆசை இருக்கும் அது என்ன என கேட்கிறார். அப்படி எல்லாம் எதுவும் இல்லை என சந்தியா சொல்ல எல்லா விஷயமும் எனக்கு தெரியும் சொல்லுங்க என கேட்கிறார். எதுக்கு என்கிட்ட மறைக்கிறீங்க. நான் உங்களுக்கு இந்த சரியான கணவனா இல்லையா என கேட்கிறார். அப்படியெல்லாம் இல்ல நீங்க எதுக்கு உங்க மேல குறையை சொல்லிக்கறீங்க என சந்தியா கூறுகிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக சமூக விரோதிகளையும் தப்பு பண்றவங்களுக்கும் தண்டனை வாங்கி கொடுக்கணும் அதுதான் என்னுடைய ஆசை எங்க அப்பா அம்மாவோட தனது ஆனால் அதெல்லாம் இப்போ நிராசை ஆகிவிட்டது என கண்கலங்கி ஆடுகிறார். என்னுடைய கனவு நிறைவேறினால் இந்த பூமி தாங்காது என சந்தியா கூறுகிறார். நீங்க இப்படி பேசுற ஆளே கிடையாது ஏன் உங்களோட கனவு நிராசையாக ஆகணும் என கேட்கிறார்.

எல்லாமே ஒரு கணக்கோட தான் நடக்குது‌. அந்தப் பேனா கடைசியா என்கிட்ட தான் வந்து சேர்ந்தது. உங்க அப்பன் மாத காப்பாத்த நான் தான் கடைசி நேரத்தில் போராடினேன். அவர் இறக்கும் போது என் கைய புடிச்சி கிட்டு தான் இருந்தார். இனி உங்களுக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து எல்லாத்தையும் செய்ய வேண்டியது நான் தான் என அந்த ஆண்டவன் முடிவு பண்ணியிருக்கான். இனிமே உங்களோட கனவை நிறைவேற்ற நான் இருக்கேன். உங்கள நான் படிக்க வைக்கிறேன் என சரவணன் வாக்கு கொடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.