சந்தியா எடுத்த முடிவை கேட்டு அதிர்ச்சியான சரவணன் அவரை சமாதானம் செய்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியாவுக்கு பாராட்டு விழா நடக்க போகிறது எனத் தெரிந்து வீட்டிற்கு வருகின்றனர் அவருடைய அண்ணனும் அண்ணியும். பிறகு இந்த விழா ரத்தாகிவிட்டது என குடும்பத்தார் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான இவர்கள் சந்தியாவை பார்த்து இதற்கெல்லாம் காரணம் நீ தானே இந்த நிகழ்ச்சியை நிறுத்துன என கேட்கின்றனர்.
பிறகு சரவணன் மயிலு தன்னிடம் எல்லா விஷயத்தையும் சொன்னதாக ஒரு ஏன் இப்படி பண்ணீங்க என கேள்வி கேட்கிறார். நடந்தது நடந்து விட்டது சரி கிளாஸ்க்கு கிளம்புங்க எனச்சொல்ல இனிமேலும் அத்தையை ஏமாற்ற முடியாது நீங்க கிளாசுக்கு போற விஷயத்தை சொல்லுங்க, அதுவரைக்கும் நான் கிளாசுக்கு போறதா இல்லை என சொல்ல சரவணன் அதிர்ச்சியாகிறார். பிறகு அப்பாவின் கனவு பற்றி சொல்லி சந்தியாவை கிளாசுக்கு போக சம்மதிக்க வைக்கிறார்.
அதன் பின்னர் பார்வதி பாஸ்கரை வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்கின்றனர். குடும்பத்தார் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க பிறகு பாஸ்கரின் அம்மா சிவகாமியிடம் பேசும்போது ரெண்டு பேரும் மைசூருக்கு போறாங்க போயிட்டு சந்தோஷமா இருந்திட்டு வரட்டும் அப்பதானே நமக்கும் பேரனோ பேத்தியோ கிடைப்பாங்க எனக் கூறுகிறார். இதைக் கேட்ட சிவகாமி சந்தியா சரவணனையும் ஹனிமூன் அனுப்பி வைக்க முடிவு செய்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.