Raja Rani 2 Episode Update 01.11.21

நாடகம் போட்டு சிவகாமியின் ஏமாற்றி கடைசியில் சரவணனை போட்டியில் கலந்துக்க சம்மதம் வாங்கியுள்ளார் சந்தியா.

Raja Rani 2 Episode Update 01.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியா வீட்டில் இருந்தவர்கள் உதவியுடன் சப்பாத்தி செய்து அதன் மூலம் சிவகாமியை ஏமாற்றுகிறார். இந்த சைடு கேப்பில் சந்தியாவின் மாமனார் என் மருமகள் என்ன சரவணன் மாதிரி தன்னம்பிக்கை இல்லாதவளா? என கூறுகிறார். உடனே சந்தியா எனக்கு சப்போர்ட் செய்ய என்னுடைய அப்பா அம்மா இருந்தாங்க அவருக்கு அப்படி எந்த சூழ்நிலை இல்லையே மாமா என சொல்கிறார். உடனே அங்கிருந்து கடைக்கு கிளம்பிய சிவகாமி சரவணனை வீட்டிற்கு அழைத்து வருகிறார். அதற்குள் வீட்டிற்கு அனைவரும் வந்து விடுகின்றனர்.

ரஜினியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு..

சரவணனோடு வீட்டுக்கு வந்த சிவகாமி இந்த சமையல் போட்டியில் கலந்து கொள்கிறேனு உன் வாயால சொல்லு என கூறுகிறார். என் புள்ளையா இருந்தா சொல்லு என சொல்ல சரவணன் கலந்து கொள்கிறேன் என கூறுகிறார். அதன்பிறகு சந்தியா உங்களிடம் ஒரு உண்மையை சொல்லணும் என சொல்கிறார். பிறகு கிச்சனுக்கு சென்று மாவு பிசைய பயன்படுத்திய மற்றும் சப்பாத்தியை தேய்க்க பயன்படுத்திய மிஷின்களை எடுத்து வருகிறார். அவர் இந்த போட்டில கலந்துக்க வைக்க உங்களால் மட்டும்தான் முடியும் அதனாலதான் இப்படி எல்லோரும் சேர்ந்து உங்களிடம் பொய் சொன்னோம் என கூறுகிறார். எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்க என சிவகாமி கோபப்பட உடனே இத உங்க கிட்ட இருந்து தான் கற்றுக்கொண்டேன் என சொல்கிறார். பொய் சொல்ல என் கிட்ட இருந்து கத்துகிட்டுயா என சிவகாமி கூறுகிறார்.

நான் எப்பவும் இந்த கடையில் தான் இருப்பேன்! – புதிய Costume கடையை திறந்த Vanitha | HD

நல்ல விஷயத்துக்காக பொய் சொல்லலாம் என நீங்கதான் பார்வதி கிட்ட சொன்னீங்க. பார்வதி மற்றும் அவருடைய அப்பாவும் ஆமாம் என சொல்ல பின்னர் சந்தியா நான் உங்கள் பையன் என்னுடைய புருஷன் வாழ்க்கையில் முன்னேறனும்னு தான் பொய் சொன்னேன் என சொல்கிறார். பிறகு சிவகாமி சரி அவன கூட்டிட்டு போய் பதிவு பண்ணு என கூறுகிறார்.

உடனே சந்தியா ஆதியின் லேப்டாப்பை வாங்கி பதிவு செய்கிறார். விண்ணப்பம் அவர்களுக்கு சென்று விடுகிறது. ஆனால் அதற்குள் நேரம் முடிந்து விடுகிறது. கலந்துக்க முடியுமா முடியாதா என்ற சந்தேகத்தில் சந்தியா இருக்க கடைசியில் அவர்களுக்கு போட்டியில் கலந்து கொள்ளலாம் என மெசேஜ் வருகிறது. சிலர் நாளைக்கு அவர் மெட்ராசுக்கு போகணும். இந்த போட்டியில ஜெயிச்ச தான் பெரிய போட்டியில் கலந்து கொள்ள முடியும் என கூறுகிறார். உடனே சிவகாமி போயிட்டு டிரஸ் எல்லாம் எடுத்து வை என கூறுகிறார். எனக்கு ஒரு மாதிரி இருக்கு என அவர் அந்த இடத்தை விட்டு நகர்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட். ‌‌