நடிகர் ராகவா லாரன்சின் வீட்டின் முன்பு மக்கள் கூடி தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
Raghava Lawrence Help to People : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். மக்களுக்காக தொடர்ந்து பல பிரச்சனைகளில் குரல் கொடுத்து வருவது இல்லாமல் அவர்களுக்காக உதவியும் வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் வீட்டில் தவித்து வரும் நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து உதவி வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் 20க்கும் மேற்பட்டோர் ராகவா லாரன்ஸ் வீட்டின் முன்பு கூடியுள்ளனர்.
மேலும் தங்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. சாப்பிட வழியும் இல்லை என கூறியுள்ளனர்.
மேலும் எங்கள் சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையடுத்து ராகவா லாரன்ஸ் அடுத்த 15 நாட்களுக்கு அவர்கள் தேவையான பொருட்களை கொடுத்துள்ளார். மேலும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.
லாரன்ஸின் இந்தச் செயலுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.