Radha Ravi vs Nayanthara – நயன்தாராவை கொச்சையாக பேசியதால் ராதா ரவிக்கு ஏற்பட்டுள்ள அவலம் குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பழம் பெரும் நடிகரான ராதா ரவி தொடர்ந்து எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படங்களில் ஒன்றான கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதா ரவி நயன்தாராவை கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் ராதா ரவியின் பேச்சுக்கு கண்டனங்களை கூறி வருகின்றனர்.
இதன் விளைவாக தற்போது பெண்ணை கொச்சைப்படுத்தியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் ராதா ரவியை திமுக-வில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளார்.
இது குறித்து நெட்டிசன்கள் பலரும் ராதா ரவிக்கு இந்த அசிங்கம் தேவை தானா என விமர்சனம் செய்து வருகின்றனர்.
பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். pic.twitter.com/vEM2Eri2zN
— M.K.Stalin (@mkstalin) March 25, 2019