Producer Council Verdict : தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் விஷால் தற்போது சங்க வழக்கிலும் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
நேற்று விஷாலின் எதிரணியினர் தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ 7 கோடிக்கும் மேலாக முறைகேடு செய்து விட்டதாகவும் இதனை ஈடுகட்டவே இளையராஜா 75 விழா நடத்தப்பட உள்ளதாகவும் தயாரிப்பாளர் சங்கத்தை முற்றுகையிட்டு பூட்டு போட்டனர்.
இதனையடுத்து இந்த பூட்டை திறக்க முயன்ற விஷாலை போலீசார் கைது செய்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதன்பிறகு இது விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை போலீஸ் தடுத்து நிறுத்தியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் விஷால் தரப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.