Powe Star Srinivasan : காமெடி நடிகர் திடீர் மாயமானதால் அவரது மனைவி போலீசில் புகார் அளித்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பலர் படங்களில் நடித்து பிரபலமானவர் பவர் ஸ்டார். அதே அளவிற்கு போர்ஜரி வேலைகளில் ஈடுபட்டு ஜெயிலுக்கு எல்லாம் சென்று வந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜீலி அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனலில் புகார் அளித்துள்ளார்.
அதாவது தன்னுடைய நண்பனை பார்க்க சென்ற என்னுடைய கணவர் ஸ்ரீநிவாசன் தற்போது வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உடனடியாக கண்டு பிடித்து தருமாறு அண்ணா நகர் போலீஸாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீனிவாசன் மனைவியின் இந்த புகார் மனு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலியின் புகாரை தொடர்ந்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவர் ஸ்டார் மாயம் ஆனதற்கு என்ன காரணம் என்ற விவரங்கள் எல்லாம் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.