பவுடர் பட பாணியில் கேரளாவில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தாதா 87 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ ஜி. இது படத்தை தொடர்ந்து பொல்லாத உலகின் பப்ஜி, பவுடர் உள்ளிட்ட சில படங்களை இயக்கி வருகிறார்.

நிகில் முருகன், வித்யா பிரதீப் உட்பட பலர் இணைந்து நடித்து வரும் இந்த பவுடர் படத்தின் டிரைலர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த ட்ரெய்லரில் மனிதக் கறி சாப்பிடுவது போன்ற காட்டப்பட்டிருந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படியான நிலையில் தற்போது இதே பாணியில் கேரளாவில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்து அந்த மாமிசத்தை ஒரு குடும்பத்தைச் சார்ந்த தம்பதியினர் உண்டதாக வெளியான தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமா பட வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி அந்த பெண்களை நரபலி கொடுத்து தம்பதியினர் அந்த கறியை சாப்பிட்ட விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற ஆசையில் இப்படி செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பல வருடங்களுக்கு முன்னர் மோகன், சத்யராஜ் நடிப்பில் வெளியான நூறாவது நாள் திரைப்படத்தில் நடந்ததை போலவே நிஜத்திலும் ஒரு சம்பவம் நடந்த நிலையில் தற்போது பவுடர் படத்தில் காட்டப்பட்டுள்ளது போலவே கேரளாவில் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.