நடிகை பூஜா ஹெக்டே தற்போது சுற்றுலா செல்வதற்காக தயாராகியுள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் இப்படம் வந்து போன அடையாளமே தெரியவில்லை. ஆதலால் பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவில் நடிக்க சென்றுவிட்டார். அங்கே சில ஐட்டம் சாங்குகளில் அசத்தலான நடனத்தை ஆடி பிரபலமான பூஜா ஹெக்டே அல்லு அர்ஜுன் உடன் இணைந்து “வைகுண்டபுரம்” என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் பிரபலமான பூஜா ஹெக்டே தமிழில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான விஜயின் “பீஸ்ட்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பூஜா ஹெக்டேவிற்கு அதிக பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.

இதனால் தெலுங்கு, ஹிந்தி என்று பல படங்களில் கிடைத்த வாய்ப்பின் மூலம் பிசியான நடிகையாக மாறி இருக்கிறார். அதன்பின் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ராதே ஷாம்’ மற்றும் ‘ஆச்சார்யா’ என்ற இரண்டு திரைப்படங்களும் பயங்கரமான தோல்வியை சந்தித்தது. ஆனாலும் மனசோர்வடையாமல் புத்துணர்ச்சியோடு பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பூஜா ஹெக்டே தற்போது சுற்றுலா செல்ல போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் ஒரு மாதத்தில் மூன்று கண்டங்கள் மற்றும் நான்கு நகரங்களுக்கு செல்ல போவதாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் பரவி வருகிறது.